மாதம் ஒரு சன்மார்க்க மாணவர்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர் Oct – 2025

Matham-oru-sanmargi-banner

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளற் பெருமானிடம்  மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளற் பெருமானின் திருஅருட்பாவில்  தோய்ந்திருந்தார்கள். தைப்பூசந்தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின்  சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம்  அலை கடலெனத் திரண்டு வந்தது.

MuthuramalingaDevar-img

வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து கொள்ளாத  சிலர், பெருமானின் மறைவில், பலவிதமான சந்தேகங்களை எழுப்பி, பொது மக்களை  மிகவும் குழப்பி வந்தனர்.

ஆனால், தேவர் திருமகனாரோ, பெருமான் போன்ற ஞானிகள் அடைந்த நிலை எத்தகையது என்பதைக் கடந்த 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் நாள் மதுரை வெள்ளியம்பல  மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மகாநாட்டில் பேருரை நிகழ்த்தி, வள்ளல் பெருமான் அடைந்த உண்மை நிலையினை அனைவரும் அறியச்  செய்தார்.

image-1
image-2

தேவர் திருமகனாரின் அந்தப் பேருரை “அருள் மறை தந்த வள்ளலார்” என்ற  தலைப்பில் புத்தகமாக, (ரூ.10) கடந்த 2008 டிசம்பர் மாதம் மதுரையில்  நடைபெற்ற மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு விழாவின் போது  வெளியிடப்பட்டது. ஆன்மீகத்தில் தேவர் பெருமகனார் எந்த அளவிற்கு உயர்ந்த  நிலையில் இருந்தவர் என்பதற்கு, இந்தப் பேருரை ஒரு சான்றாகும்.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரின் வீடுகளிலும் சன்மார்க்க சங்கங்களிலும்  இருக்க வேண்டிய ஒரு அருமையான நூல் இதுவாகும்.

மதுரை மாவட்டச் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள்,  இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கெனப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

அந்தப் புத்தகத்தின் முன், பின் அட்டைப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், முதுகுளத்தூர் பேருந்து  நிலையத்தில், தேவர் திருமகனாரின் உருவச் சிலை எழுப்பப்பட்டு, கம்பீரமாகக்  காட்சி அளிக்கிறது.

தேவர் ஐயா அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ஒரே தேதி அக்டோபர் 30.

(அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963).

இந்தியாவின் இந்த தலைசிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி நாளில் லட்சக்கணக்கான மக்கள் பசும்பொன் கிராமத்தில் குவிகின்றனர். நமது இதழ் வெளிவரும் இந்த அக்டோபர் மாதத்தில் அவரைப் போற்றி நினைவுகூறுவோம்.

-தயவுடன் தனிப்பெருங்கருணை குழு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top